Thursday, December 4, 2008

‘ஜனங்ககிட்ட அடிச்சது போதும்... தேர்தல் வருது!’

ரெண்டு மாசம் முடிஞ்ச வரைக்கும் அடிச்சாச்சு... இனி நல்லவங்களா மாறிவிட வேண்டியதுதான் என மத்திய அரசு முடிவு செய்துவிட்டது போலும்...

அட ஆமாங்க... பெட்ரோல் டீஸல் விலைக் குறைப்பை அதிகாரப்பூர்வமா அடுத்த வாரம் அறிவிக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்...

அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10, டீசல் ரூ.3 மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.20ம் குறைக்கப்படும் என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் நேற்று ‘கோடி” காட்டியுள்ளது!

கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக பேரலுக்கு 147 டாலராக இருந்தது. அதைக் காரணம் காட்டி, ஒரு முறை இருமுறை அல்ல 5 முறை பெட்ரோல் – டீஸல் விலை உயர்த்தப்பட்டது.

இந் நிலையில், சர்வதேச பொருளாதார நெருக்கடி ஆரம்பமானது. இந்த நெருக்கடியால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை மளமளவென சரியத் தொடங்கியது. எனவே, கச்சா எண்ணெய் விலையும் சரிந்தது.

கடந்த இரு மாதங்களாகவே, கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியில் இருந்தது. ஆனாலும் இந்திய பெட்ரோலியத் துறை விலைக் குறைப்பு பற்றி மவுனம் சாதித்தது. இந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 45 டாலர் ஆகிவிட்டது. அதாவது நான்கில் ஒரு பங்காக குறைந்து பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது கச்சா எண்ணெய் விலை. 1 லிட்டர் கச்சா எண்ணெய்யின் இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ.13 மட்டும்தான்!

இன்றைய தேதிக்கு அரசு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பெறும் லாபம் எவ்வளவு தெரியுமா... பெட்ரோலியத் துறை கொடுத்துள்ள தகவல்களின் படி ரூ.22 ரூபாய் (சுத்திகரிப்புச் செலவு, மத்திய அரசின் வரிகள், போக்குவரத்துச் செலவு, நிர்வாகச் செலவு, மாநில வரிகள் எல்லாம் கழித்த பிறகு!)

டீஸலில் இதைவிட சற்று லாபம் குறைவாக இருக்கும் அவ்வளவுதான்.
இதில் கொடுமை என்னவென்றால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு குறைத்தாலும், இதில் சம்பந்தமே இல்லாமல் கணிசமான வரி வருமானம் பெறும் மாநில அரசுகள் வரியைக் குறைக்கும் எண்ணத்திலேயே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை ஏறும்போதும் அந்தந்த மாநில அரசுகள் உள்ளூர் வரி விகிதத்தையும் உயர்த்திக் கொண்டே போகின்றன.

நேற்றுதான் ஒருவழியாக பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை குறைக்கப்படும் என்று அரை மனதோடு அறிவித்துள்ளார். அது கூட அடுத்த வாரம்தானாம்.

சிலர் இப்படி வாதிடக் கூடும்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வாங்கும்போது 3 மாத கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே 3 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

அது சரிதான்... சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்வதாக செய்தி வெளியான அடுத்த இரண்டு மணிநேரங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துகிறார்களே... அது எப்படி? அதற்கும் 3 மாத காண்ட்ராக்ட் காலம் முடியும் வரை காத்திருந்து நிலைமைகளை கணித்து உயர்த்தலாமே!

6 மணிக்கு விலை உயர்வு என ஊடகங்களில் அறிவிப்பு வரும். இரவு எட்டு மணிக்கே பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து ஆட்ர்டர்கள் பறக்கும். நள்ளிரவுக்குள் விலை உயர்வு அமலுக்கு வந்துவிடும். இந்த வேகம் விலைக் குறைப்பில் இல்லையே... இவர்கள் மக்கள் நல அரசுகள் என சொல்லிக் கொள்வதில் அர்த்தமிருக்கிறதா?

பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து வருவதால், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதைச் சாக்காகக் கொண்டு அரசு மௌனம் சாதிக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் முடிந்த வரை லாபம் பார்த்து வருகின்றன.

குறிப்பு: இந்தப் பணம் ஆட்சியாளர்கள் வீட்டுக்கா போகப்போகிறது? என்று கேட்பவர்களுக்கு... அரசுத் துறை பெட்ரோலிய நிறுவனங்கள் அடிக்கும் லாபம் அரசியல்வியாதிகள், மற்றும் அதிகாரிகளின் ஊதாரிச் செலவுகளுக்குதான் அதிகம் பயன்படுகிறது என்பது ஆடிட்டர் அண்டு கண்ட்ரோலர் ஜெனரலின் அறிக்கை வைத்துள்ள குட்டு!

-எஸ்.ஷங்கர்

2 comments:

ttpian said...

சொந்தமாய் யோசிக்காதவரை, 21 சீட்டு என்ன? 40 சீட்டும் கிடைக்கும்.....
எப்போது தமிழனுக்கு டெல்லி மதிப்பு கொடுக்கவில்லையோ...இந்த நாடு இருந்தால் என்னா?நாசமாய் போனால் என்ன?

ttpian said...

முத்துகுமார் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவன் நான்...
பேடிகள் என்ன செய்வார்கல் என்று நான் கவலைபடுவதைவிட ..
இவர்கள் பேருந்து நிலயத்தில் மாமா வேலை பாக்கலாம்!